Sunday, September 07, 2008

சமூக நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?


சமூக, மத நல்லிணக்கம் காக்கப்பட விரும்புபவரா நீங்கள்?

அப்படியானால் தினமலரை தயவுசெய்து புறக்கணியுங்கள்.


தினமலர் என்கிற நாளிதழ் பார்ப்பனீய சார்புடன் இருந்துவிட்டு போகட்டும், யாரும் கவலைப்படமாட்டார்கள். தினமலரை பார்ப்பனீய சார்பு என்பதைவிட சங் சார்பு மற்றும் இஸ்லாமிய விரோத நாளேடு என்பதே சரி என்னும் வகையிலேயே அதன் செய்திகளும் போக்கும் அமைந்து வந்தன.


கடந்த இரண்டு ஆண்டுகளாக, முஸ்லிம்களின் புனித இரமலான் மாதத்தில் சம்பந்தமேயில்லாமல் முஸ்லிம்களை மிகவும் புண்படுத்தும் கார்ட்டூன்களை அது பதிப்பித்து வருகிறது என்னும் போது அந்த மதவெறி ஏட்டின் உள்நோக்கம் தெளிவாக விளங்கத்தான் செய்கிறது. எப்படியாவது முஸ்லிம்களைத் தூண்டி விட்டு தாம் குளிர்காய இயலாதா என்று நினைக்கிற சுயநலம்.. ஐ மீன், சங்நலமே அது. (குஜராத்தில், ஒரிஸ்ஸாவில், சிறுபான்மையினரை கொன்றொழிக்க ஏற்படுத்திக்கொண்ட காரணத்தை ஒப்பிட்டுப் பாருங்கள், விளங்கும்)


முஸ்லிம்களும், மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள சமூக நல ஆர்வலர்களும் உணர்ச்சிவசப்பட்டு தினமலரின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாமல்,நிதானமாக, தினமலரை எல்லாவகைகளிலும் புறக்கணிக்க வேண்டும்; பாடம் புகட்டவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி: முதலில் இப்படியொரு சமூக விழிப்பூட்டும் பதிவிட்ட பிரபல பதிவர்கள் அபூமுஹை, & மரைக்காயர்.

1 comment:

மஹ்மூது பந்தரான் said...

தினமலரை புறக்கனிப்பதோடு, இனிமேல் தினமலம் என்றே அழைப்போம்.