Sunday, February 13, 2005

15 வயதில் இந்திய பெண்களின் திருமணம்!

THANKS TO : தமிழில்: விக்டர்சன்

இந்திய நாடு பால்ய விவாகம் மற்றும் சிறுவயதில் திருமணம் செய்வதை தடைசெய்திருந்தாலும் பாதிக்கும் மேற்பட்ட சதவீதத்தில் இந்திய பெண்கள் 15 வயது அல்லது அதற்கு குறைவான வயதிலேயே திருமணம் செய்விக்கப்படுகிறார்கள் என்று ஓர் அரசாங்க அறிவிப்பு தெரிவிக்கிறது.
மக்கள் தொகை மற்றும் அதன் முன்னேற்றங்கள் என்ற அறிக்கையில் '20 முதல் 24 வரையிலான வயது பிரிவில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் 15 வயதில் திருமணம் முடிக்கப்பட்டவர்கள் என்றும் பருவம் அடையாத இரண்டும் கெட்டான் வயதில் திருமணம் முடிக்கப்படும் ஆண்களும் இதில் அடங்குவர்" என்றும் சுகாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய சட்டவிதிகளின் படி திருமண வயது ஆணுக்கு 21 என்றும் பெண்ணுக்கு 18 என்றும் உள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் 68 முதல் 71 சதவிகித பெண்கள் 18 வயதிற்குள்ளாகவே திருமணம் முடிக்கப்படுகின்றனர் என்றும் ஆனால் இந்த விகிதம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 17 முதல் 25 சதவிகிதமாகவே உள்ளது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இது போன்ற திருமணங்கள் பலவிதமான குழப்பங்களையும் பிரச்சினைகளையும் பெண்களுக்கே அதிக அளவில் உண்டு பண்ணுகிறது. எதையும் சரிவர முடிவு பண்ணத் தெரியாத பருவம்ää கட்டுப்பாடான வாழ்க்கை முறை மற்றும் குறைந்த அளவிலான கணவனுடனான பேச்சுகள்ää புரியாமை போன்றவை பெண்களுக்கு சரியான துணையை தேர்வுசெய்வது மற்றும் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்வது போன்றவற்றில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் தேசிய அளவிலான இந்த அறிக்கை பெரும்பாலான இளம் பெண்கள் திருமணத்திற்கு பிறகே உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்றாலும் அதிக அளவிலான இரண்டும் கெட்டான் வயதில் உள்ளவர்கள் கற்பழிப்பு மற்றும் முறையற்ற உடலுறவுகளில் அதிகம் ஈடுபடுவதாக கூறுகிறது. எனினும் இதில் சரியான புள்ளி விபரங்களையோ ஆய்வு அறிக்கைகளையோ சொல்லப்படவில்லை.
விளங்காத பருவத்தில் ஏற்படும் ஆர்வத்தின் காரணமாக இந்த வயதினருக்கிடையில் ஏற்படும் இந்த முறையற்ற உறவுகள் நாளடைவில் ஒருவரில் தொடங்கி பலபேரிடம் தொடர்பு வைத்துக்கொள்வது பாலாத்காரம் மற்றும் இன்னபிற வன்முறைகளில் அவர்களை ஈடுபட தூண்டிவிடுகிறது. இது இவர்களுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற உடலுறவையும் வளர்க்கிறது என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது. பெரும்பாலான டீன் ஏஜ் ஆண்களும் பெண்களும் கருத்தடை சாதனங்களை எப்படி முறையாக பயன்படுத்துவது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருப்பதாக இந்த அறிக்கைக் கூறுகிறது. 43 சதவிகித மக்கள் மட்டுமே முறையான கருத்தடை சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்திருக்கிறார்கள் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கை கூறுகிறது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரம் 'HIV' வைரஸ் தொற்றுள்ளவர்கள் 5 மில்லியன்கள் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கிறது. 10 முதல் 25 வயதிற்குட்பட்ட பிரிவினர் இந்த வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கும் அதே வேளையில் வெறும் 59 சதவிகிதமானவர்களே கருத்தடை சாதனங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்கிறார்கள். கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதை பற்றிய விழிப்புணர்வு 27 சதவிகித சிறுவயது பருவத்தினரை இன்னும் அடையவேண்டிய நிலையில் இதில் 16 சதவிகித பெண்களும் அடங்குவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.


THANKS TO:

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகம்

www.seidhialaigal.com

பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (ROHYPNOL) மருந்து

பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (rohypnol) மருந்து
ரோஹிப்னோல் எனும் மருந்து பெண்களை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அறியாமலேயே சீரழிக்க உதவுகிறது. சமீபத்தில் மும்பையில் மேஜிக் எனும் இரவு நேர விடுதியிலிருந்து 5 குண்டர்கள் ஒரு பெண்ணை கடத்திச் சென்று கற்பழித்து பேன்ட்ஸ்டான்ட் எனும் இடத்தில் தூக்கி எறிந்து விட்டதாக வழக்கு பதிவாகியது. பாதிப்புக்கு உள்ளான பெண்னை விசாரித்த பொழுது அவருக்கு என்ன நடந்தது என்பது சிறிதளவு கூட ஞாபகத்தில் இல்லை. பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்திய பொழுது அப்பெண்ணுக்கு ரேஹிப்னோல் என்னும் மருந்து கொடுத்து சீரழிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.
(rohypnol) மருந்து என்றால் என்ன?
(rohypnol) மருந்து சிறிய வில்லையாக வருகிறது மேலும் இம்மருந்து பல முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தாகும். இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு தனக்கு கடந்த 10-12 மணிக்கு முன்னால் என்ன நடந்தது என்பதே நினைவில் இருக்காது. மேலும் இதை உட்கொள்ளும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் வாய்ப்பே கிடையாது அதற்கு மேல் நிரந்தரமாக மலட்டுத்தன்மை அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வகையான மாத்திரை வில்லைகள் இந்தியா போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள்ää கல்லூரிகள் போன்ற இடங்களில் இளவயதினரை குறிவைத்து விற்கப்படுகிறது என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இவ்வகை மாத்திரைகள் சமுதாயச் சீரழிவை உண்டாக்கும் கயவர்களின் கைகளில் சிக்கியிருப்பதுதான் மிகவும் வேதனையான விசயம்.
(ROHYPNOL) மருந்து எப்படி இருக்கும் எவ்வகையைச் சார்ந்தது அடையாளம் காணமுடியுமா?
இம்மருந்து வேலியம் (Valium )மற்றும் ஜனாக்ஸ் (xanox)போன்ற தூக்க மாத்திரை வகையைச் சார்ந்தது. இவ்வகை மருந்து ஆரம்பத்தில் தூக்கம் உண்டவாதற்காகவே உபயோகப்படுத்தப்பட்டது. மேலும் இம்மருந்தின் முக்கிய குணமானது இம்மருந்தை வேறொரு திரவமோ அல்லது மருந்துடனோ சேர்த்து உட்கொள்ளும் பொழுது மற்ற மருந்தின் வீரியத்தை கூட்டக்கூடிய சக்தி உடையது. அதன் காரணமாகவே அமெரிக்கா போன்ற மேல் நாடுகளில் கேளிக்கை விருந்துகளின் மது பானங்களுடன் உட்கொள்ள ஆரம்பித்தனர். பின்னர் அந்நாடுகளில் அதன் விபரீதத்தை அறிந்து தடை செய்யப்பட்டது. இம்மருந்தை உபயோகித்து கற்பழிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காகவே Drug Induced Rape Prevention and Punishment Act எனும் சட்டம் அமெரிக்காவில் இயற்றப்பட்டது. அதற்கும் மேலாக அம்மருந்து பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது.
அடையாளம்: (Rohypnol) மருந்து வண்ணம் வாடை சுவை எதுவும் இல்லாதது. அதனால் அம்மருந்தை குடிக்கும் பானத்திலோ வேறு எதிலும் சேர்க்கும் பொழுது உட்கொள்பவர்களால் அடையாளம் காண முடிவதில்லை. அக்காரணத்தினாலேயே நயவஞ்சகர்கள் இதைக்கேடான வழிக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள. இம்மருந்தை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் RAPE DRUG என்று அழைக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாத்திரை எங்கு கிடைக்கும் மற்றும் எப்படி உபோயகம் செய்வது என்று பல வலைத்தளங்களிலும் விரிவாக விவரித்து இருப்பது மிகவும் கொடுமையான விசயம். மக்கள் குறிப்பாக பெண் மக்கள் இனிமேலாவது நவ நாகரீகம் என்ற மாய வலையில் விழாமல் விழித்துக் கொள்வார்களா...?
THANKS TO : செய்யத் ஆப்தீன்

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகம்
thanks to : www.seidhialaigal.com

வேண்டுகோள்

வலைப்பதிவுகளை தவறாக பயன்படுத்துவதை; ஒருவருக்கொருவர் குற்றம் கன்டுபிடிப்பதை விடுத்துஆக்கப்பூர்வமான நல்ல இலக்கியங்கள் மலரவும் வளரவும் வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி