Wednesday, December 26, 2007

மோடியின் வெற்றியும் அதில் மகிழ்பவர்களும்.

குஜராத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி பலரும் பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிறந்தப் பதிவாக கருதப்படுகிற நண்பன் ஷாஜியின் பதிவுக்கும், பனிமலரின் பதிவுக்கும் நானளித்த பின்னூட்டம் இது:

ஜனநாயகம் என்பது பணபலமும் படைபலமும் தான், சாமானியனுக்கு அதில் பங்கில்லையோ என்று எண்ண வைத்தது மோடியின் தேர்தல் வெற்றி.

எல்லோருமே எதிர்பார்த்த 'இந்த வெற்றி'யில் புளகாகிதமடைந்து பதிவிடுபவர்களும் நாம் 'எதிர்பார்த்தவர்கள்' தான்.100க்கு 41 பேர் (விருப்புவெறுப்பு, பயம், விரக்தி, அலட்சியம் போன்ற) பல காரணங்களால் வாக்களிக்காமலே இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.

வாக்களித்த 59ம் சிதற 59ல் பெரும்பான்மை, நிச்சயம்30%க்கு குறைவான வாக்குகளைப் பெற்றவரே வென்றதாகச் சொல்வது முறையான ஜனநாயகமா?கொலை, கொள்ளைக்காரர்கள், சினிமாகவர்ச்சி ஆகியன வெல்வதாகத்தெரிவது இதனால் தான்.(இதற்காகத்தான் தேர்தல் அமைப்பை மாற்றியமைக்கச் சொல்கிறோம்).அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அமைப்பை மாற்றியமைத்தால், மோடிகள் தங்களுக்குண்டான 30% கும் குறைவான குண்டர்களுடன் தோல்வியையே தழுவ வேண்டியிருந்திருக்கும்.

கடும்குற்றவாளியாக தண்டனை பெறவேண்டியவர்கள் முதலமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் ஆவது நம் தேசத்தின் சாபக்கேடு ஆகும்.ஆ.வி ஆசிரியரை சிறைக்கு அனுப்பக் காரணமாயிருந்த கருத்துப்படத்தின் வரிகளில் ஜேப்படி, பிக்பாக்கெட் என்றிருந்தவற்றில் மட்டும் இனப்படுகொலைக்காரன், ஆலய இடிப்புக்காரன் என்று மாற்றிப் படிக்கும் நிலை நம் தாய்த்திருநாட்டில் உண்மையாகி வருவது நேர்மையுள்ள எவருக்கும் உவப்பாக இருக்க முடியாது.

மோடி செய்த இனப்படுகொலைகளை தவறிச்செய்த ஒன்றாக கருத இடமேயில்லை. தவறிச்செய்திருந்தால், குறைந்தபட்சம் உதட்டளவு மன்னிப்பாவது கேட்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ அந்தப்படுகொலைகளுக்காக ஒரு மிருகப் பெருமிதமே வெளிப்பட்டது. எனவே தயவுசெய்து பாலாக்கள் //தவறு தவறு தான்// என்று சொதப்பாமல், கொலைகாரர்களையும் தெரிந்தே எடுக்கும் ஜனநாயக ஓட்டைகளை அடைக்கும் வழிகளை யோசிக்கட்டும்.

மோடியாக இருந்தாலும், ஹெச்.கே.எல். பகத்தாக இருந்தாலும், நாம் சொல்வதெல்லாம் முதலில் குற்றங்களுக்கான உரிய தண்டனையையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் மானசீக மன்னிப்பையோ பெறவேண்டும். அதன்பிறகே, தேர்தல் களம் காணமுடியும் என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் ஜனநாயகம் அதன் பொருளை இழக்காதிருக்கும்.

6 comments:

வெத்து வேட்டு said...

only terrorists muslims who now know they cannot touch Modi are furious at Modi's victory...

வெத்து வேட்டு said...

கலவரத்தை ...கலவரத்தால் எதிர்ப்பது...ஆயுதம் எடுப்பவனுக்கு பதிl ஆயுதம் ....அமைதி காப்பவனுக்கு பதில் அஹிம்சை...இதுதான் கொள்கை.

சுட்டுவிரல் said...

வாங்க மிஸ்டர் வெத்துவேட்டு,
உங்க பேரு மாதிரியே உங்க கருத்தும் இருக்கறதாலே ஒண்ணும் சொல்றதுக்கில்லே....
வேற எடம் பாருங்க!

நண்பன் said...

சுட்டுவிரல்,

தனிப்பதிவாகவும் செய்ததற்கு பாராட்டுகள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துகள்

அன்புடன்

நண்பன்

Anonymous said...

//வாக்களித்த 59ம் சிதற 59ல் பெரும்பான்மை, நிச்சயம்30%க்கு குறைவான வாக்குகளைப் பெற்றவரே வென்றதாகச் சொல்வது முறையான ஜனநாயகமா?கொலை, கொள்ளைக்காரர்கள், சினிமாகவர்ச்சி ஆகியன வெல்வதாகத்தெரிவது இதனால் தான்.(இதற்காகத்தான் தேர்தல் அமைப்பை மாற்றியமைக்கச் சொல்கிறோம்).அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அமைப்பை மாற்றியமைத்தால், மோடிகள் தங்களுக்குண்டான 30% கும் குறைவான குண்டர்களுடன் தோல்வியையே தழுவ வேண்டியிருந்திருக்கும்.//

நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள்!

மனிச மாமிசத்தை உண்டு வாழும் மோடி கும்பலின் 30% ஆதரவு வெற்றியைக் கொண்டாடும் பாலா & டோண்டு குழுவினர் தன்னைத் தானே மெச்சிக் கொள்ளட்டும்.

அடக்கி வைக்கப்படுபவன் எந்நாளும் அடங்கியே போவான் என கனவு காண வேண்டாம்.

அநியாயமாக மக்களைக் காவு வாங்கும் கூட்டமும் அதற்கு காவடி தூக்கி புளகாங்கிதப்பட்டுக் கொள்ளும் கூட்டமும் நீண்ட நாட்களுக்கு அதே மகிழ்ச்சியுடன் உலா வர முடியாது.

தங்களுக்கான இறுதி முடிவை தாங்களே நிச்சயித்துக் கொண்டு அலையும் இரத்த வெறிப் பிடித்த கூட்டம்.

இறை நேசன்

சுட்டுவிரல் said...

நண்பன்,
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

இறைநேசன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.